சனி, 25 மார்ச், 2017

30. பொல்லா வினையேன்/Pollaa Vinaiyen

30. பொல்லா வினையேன்

          செந்தமிழ்ச் சைவர்களின் சமயக் கொள்கையான சித்தந்த சைவம் இறைஉயிர்தளை எனும் முப்பொருள் உண்மையைப் பற்றிக் குறிப்பிடும்தளை அல்லது பாசம் என்பதே உயிர்கள் பரம்பொருளான சிவத்தை அடையத் தடையாக இருக்கின்றது என்று சித்தாந்த சைவம் மேலும் குறிப்பிடும்தளை எனும் கட்டுஆணவம்கன்மம்மாயை எனும் மூன்று பொருள்களை உட்கூறாகக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிடுகின்றதுஆணவம்கன்மம்மாயை எனும் கட்டுக்களை நீக்கினால் மட்டுமே உயிர் தன்னுடைய அறியாமை நீங்கித் தன்னுடை அகண்டிதத்தை உணர்ந்துஉண்மைஅறிவுஇன்ப வடிவாய் இருகின்ற பரம்பொருளை உணர முடியும் என்று தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கை குறிப்பிடுகின்றது.

          அறியாமை நீங்குவதற்குத் தடையாகவும் பெருமானை உணர்வதற்குக் கட்டாகவும் இருக்கின்ற கன்மத்தை வினை என்றும் குறிப்பிடுவர்வினையைச் செயல் என்றும் குறிப்பிடுவர்இதனையே வடமொழியில் கருமம் என்று குறிப்பிடுவர்இதனாலேயே தீமை செய்கின்ற வினையை உடையவன் என்று குறிப்பிடப், “பொல்லா வினையேன்” என்று மணிவாசகர் திருவாசகத்தின் சிவபுராணத்தில் குறிப்பிடுவார்வினையை இருவகையாகநல்வினை என்றும் தீவினை என்றும் குறிப்பிடுவர்செம்பைக் களிம்பு பற்றி இருப்பது போன்று உயிரைக் கீழ் நோக்கிச் செலுத்துகின்ற ஆணவம் உயிரைப் பற்றியுள்ளது என்பர்இவ்வாணவத்தைப் போக்கவே பரம்பொருளான சிவம் தம் பெரும் பரிவினால் கன்மம்மாயை எனும் இரு பொருள்களை உயிருக்குக் கூட்டி வைத்துள்ளது என்பர்.

          வண்ணான் துணியில் இருக்கின்ற அழுக்கினைப் போக்க ஆற்றங்கரையில் இருக்கின்ற உவர் மண்ணைப் பயன்படுத்துவது போல உயிரைப் பற்றி இருக்கின்ற ஆணவம் எனும் அழுக்கினைப் போக்கப் பெருமான் கன்மம்மாயைக் கூட்டி வைத்திருக்கின்றான் என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றனஉயிர்களின் இயல்புகளில் சிலவான அறிவித்தால் அறிதல்எதையும் அழுந்தியே அறிதல் என்ற தன்மையை ஒட்டி உயிர்களின் ஆணவ மலத் தடிப்புக்கு ஏற்ப நுகர்ச்சிகளை வகுத்துக் கொடுத்துப் பெருமான் உயிர்களைச் செவ்வி அடையச் செய்கின்றான் என்றும் குறிப்பிடுகின்றனஉயிர்கள் அழுந்திப் பட்டறிவுப் பெற்றுத் தங்களின் அறியாமையைப் போக்கிக் கொள்ளவே உயிர்களைப் பெருமான் நல்வினைதீவினை எனும் இரு வினைகளை செய்யத் தூண்டுகின்றான் என்று சைவம் குறிப்பிடுகின்றது.

          நல்வினை என்பது தனக்கும் பிற உயிர்களுக்கும் எண்ணத்தினாலும் வாக்காலும் உடலாலும் செய்யும் நல்ல செயல்கள்தீவினை என்பது தனக்கும் பிற உயிர்களுக்கும் எண்ணத்தினாலும் வாக்காலும் உடலாலும் செய்யும் தீய செயல்கள்நல்வினையப் பொன்விலங்கு என்றும் தீவினையை இரும்பு விலங்கு என்றும் குறிப்பிடுவர்இரண்டுமே விட வேண்டியவை என்பர்இதனையே, “இருள்சேர் இருவினை” என்பார் பேராசான் திருவள்ளுவர்வினையினை அதன் நிலை கருதி மூன்றாகக் குறிபிடுவர்அவை பழவினைநுகர்வினைஏறுவினை என்பனவாம்பழவினை சேமிப்பில் உள்ளபிறவிக்குக் கொண்டு வரப்படாத வினை ஆகும்நுகர்வினை என்பது பிறவிக்குக் கொண்டு வரப்பட்டு நுகர்ந்து கொண்டிருப்பதுஇதுவே இப்பிறவியில் உயிர்கள் இன்ப துன்ப நுகர்வுகளாய் நுகர்ந்து கொண்டிருப்பதுஏறுவினை என்பது பிறவியில் நல்வினை மற்றும் தீவினை எனும் செயல்கள் செய்யும்போது புதிதாகச் சேர்த்துக் கொள்ளும் வினை.

          நல்வினைத் தீவினைகளைப் பிறவியில் நுகர்வினையாய்ச் செய்து கொண்டும் அதனால் விளையும் பயனாகிய ஏறுவினையைச் சேர்த்துக் கொண்டும் போவதால் உயிர்கள் பிறப்பு இறப்பு எனும் சுழலில் சிக்கிக் கொள்கின்றனஉயிர்கள் நுகர்ந்து கழிப்பதற்கேற்ப மாயை எனும் நுண் பொருளில் இருந்து எல்லா உயிர்களுக்குமான உடல்கள்கருவிகள்உலகங்கள்நுகர்ச்சிப் பொருள்கள் போன்றவற்றப் பெருமான் படைத்துஅவற்றுள் உயிரை உழன்று வினைகள் ஆற்றுமாறு செய்து செவ்விப்படுத்துகின்றான் என்று சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றனஉயிர்களின்  உடல்களுக்கு ஏற்ப ஓர் அறிவு ஆறு அறிவு வரை உள்ளவற்றிற்கு அவற்றிற்குரிய மனம்சித்தம்புத்திஅகங்காரம் எனும் உட்கருவிகளும் கண்காதுமூக்குநாக்குமெய்கைகால்,வாய்கருவாய்எருவாய் போன்ற கருவிகளும் அளிக்கப்படுகின்றன.

          உயிர்கள் வினையை நுகர்வதற்கு ஏற்ப எவ்வுலகில்எந்நாட்டில்எந்நகரில்எவ்வீட்டில்எக்குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று இறைவன் கூட்டுவிக்கின்றான்தவிர வீடுமனைவிமக்கள்சுற்றம்உற்றார் உறவினர்நண்பர் என யார் நமக்கு அமைய வேண்டும் என்ற நுகர்வுப் பொருள்களையும் இறைவன் கூட்டுவிக்கின்றான்இதனையே பேராசான் திருவள்ளுவரும், “வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிதொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது” என்பார்வினைகளை மனம்வாக்கு,காயம் என்ற முகான்மையான மூன்றின் மூலமே பெருமான் செயல்படுத்துகின்றான்இம்மூன்றின் ஏவல் கருவிகளே மேற்கூறிய பத்து அறி கருவிகளும் செயல் கருவிகளும் ஆகும்உடலில் உயிர் மூலாதாரம்உந்திஇதயம்கண்டம்புருவநடு எனும் ஐந்து இடங்களில் நின்று முறையே உயிர்ப்படங்கல்பேருறக்கம்உறக்கம்கனவுநனவு என்னும் ஐந்து நிலைகளில் நின்று வினையினைச் செய்யும் என்பர்.

          மனத்தினால்அன்புபொறுமைஅருள்அறச்சிந்தனைஆசைகோபம் போன்ற வினைகள் இயற்றப்படுகின்றனவாக்கினால் வாய்மைபாராட்டுஇன்சொல்பொய்புறங்கூறல் போன்ற வினைகள் இயற்றப்படுகின்றனகாயத்தினால் கொடைகளவுகொலை போன்றவை இயற்றப் பெறுகின்றனஉயிருக்குப் பிறவியில் நுகர்வினை மூன்று வழியாகத் தூண்டப் பெறுகின்றதுஅவை ஆதிஆன்மிகம்ஆதிபௌதிகம்ஆதிதெய்விகம் என்பனவாகும்ஆதி ஆன்மிகம் என்பது தன்னாலும் பிற உயிர்களாலும் ஏற்படும் இன்ப துன்ப நுகர்வுகளின் செயற்பாடுகள் ஆகும்எடுத்துக்காட்டாகக் கீழே விழுதல்முட்டிக் கொள்ளுதல்கையை நறுக்கிக் கொள்ளுதல் போன்ற துன்ப நுகர்வுகளும் பிறருக்கு உதவி மகிழுதல்பிறரிடத்தில் அன்பு பாராட்டி உள்ளம் பூரித்தல் போன்ற இன்ப நுகர்வுகளுமாகும்பிற உயிர்களினால் வரும் நுகர்வுகள் யாதெனில் பாம்பு கடித்தல்எதிரிகளால் தாக்கப் படுதல் போன்ற துன்ப நுகர்வுகளும் பிறர் உதவி செய்தல்பிறர் பரிசளித்தல் போன்ற இன்ப நுகர்வுகளும் ஆகும்.

          ஆதி பௌதிகம் என்பது பஞ்ச பூதங்களினால் வரும் இன்ப துன்ப நுகர்வுகள்எடுத்துக்காட்டாக நில நடுக்கம்தீபுயல் போன்றவற்றினால் ஏற்படும் துன்ப நுகர்வுகளும் கோள்கள்விண்மீன்கள் போன்றவற்றால் வரும் துன்ப நுகர்வுகளும் இதில் அடங்கும்ஆதி தெய்விகம் என்பது இறைவனால்சிற்சத்திகளால் அகத்திலேயோநேரிலேயோ நிகழ்த்தப்பெறும் இன்ப துன்ப நுகர்வுகளின் செயற்பாடுகள்எடுத்துக்காட்டாகப் பெருமான் தோன்றாத் துணையாக உள்ளத்தில் நின்று உணர்த்துவதால் ஏற்படும் செயற்பாடுகளும் செவ்வியுடைய உயிர்களுக்குப் பெருமான் நேரில் தொன்றி இன்ப துன்ப நுகர்வுகளை ஏற்படுத்திச் செயற்படுத்துவது ஆகும் என்பர்சிறு தெய்வம்குலதெய்வம்காவல் தெய்வம்தீய சத்திகள் என்று செயல்படுவதும் ஆதி தெய்விகத்தில் அடங்கும் என்பர்இவ்வாறு நுகர வேண்டிய நல்வினைகள் தீவினைகள் உடையவர்களாக உள்ளோம் என்பதனையே பொல்லா வினையேன் என்று மணிவாசகர் குறிப்பிட்டார்பெருமானின் திருவருளை முன்வைத்துச் சிவ நல்வினைகளை ஆற்றி வருவோமேயானால் வினைப்பயனின் விளைவுகள் நம்மை விட்டு அகலும் என்று சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக